சுயாதீன நிறுவனங்களில் அரசியல் தலையீடுகள் குறித்து மக்கள் முறைப்பாடு செய்ய முடியும் – ரவி கருணாநாயக்க

raviசுயாதீன நிறுவனங்களில் ஏதேனும் அரசியல் தலையீடுகள் காணப்பட்டால் அது குறித்து முறைப்பாடு செய்யுமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரியுள்ளார்.அனைவரும் ஒன்றிணைந்து புதிய இலங்கையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக மாற்றங்களின் ஊடாக புதிய இலங்கையை கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம்  முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் காவல்துறையினர் சுயாதீனமாக இயங்க ஓர் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply