சமூக ஊடகம் வழியே இஸ்லாமிய தீவிரவாதம் ஊக்குவிப்பு: ஸ்பெயினில் 4 பேர் கைது

policeஇஸ்லாமிய தீவிரவாதத்தை சமூக ஊடகம் வழியே ஊக்குவித்த 4 பேரை ஸ்பெயின் நாட்டு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.இதுபற்றி அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தொடர்ந்து நடந்து வரும் வேட்டையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டு உள்ளவர்களில் 3 பேர் மொராக்கோ நாட்டை சேர்ந்தவர்கள். 4வது நபர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சிறிய குழுக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கு முன்பு நூற்றுக்கணக்கானோரை இலக்காக கொண்டு குறுஞ்செய்திகள் அனுப்பியும் மற்றும் பிற சமூக ஊடகங்கள் வழியேயும் தங்களது பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். இன்றைய கைது சம்பவத்துடன் சேர்த்து, இந்த வருடத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய 23 பேரை ஸ்பெயின் போலீசார் கைது செய்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply