சோனியா – கருணாநிதி சென்னையில் இன்று பிரசாரம்

karunaசட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று சென்னை வருகிறார்.மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வரும் சோனியாகாந்தி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அங்கு தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு சென்னை வருகிறார்.மாலை 5.45 மணியளவில் மெரினா கடற்கரை அருகில் உள்ள ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடக்கும் தீவுத்திடல் செல்கிறார்.

தீவுத்திடல் பொதுக் கூட்டத்தில் சோனியாவும், கருணாநிதியும் ஒரே மேடையில் பேசுகிறார்கள்.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந் தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தன பாலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்.குமார், சமூக சமத்துவ படை தலைவர் சிவசாமி ஆகிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

சோனியாவும், கருணாநிதியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதால் தி.மு.க. காங்கிரஸ் தொண்டர்கள் தீவுத்திடலில் திரண்டு இருக்கிறார்கள்.

சோனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் சென்னையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply