துணை மந்திரி, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேருடன் சென்ற மலேசிய ஹெலிகாப்டர் மாயம்

heliதுணை மந்திரி உள்ளிட்ட 6 பேருடன் சென்ற மலேசிய ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சரக்குகள் பிரதி அமைச்சர் நோரியா காஸ்னோன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 பேரும் இந்த ஹெலிகாப்டரில் சென்றதாக கூறப்படுகிறது.மலேசிய சிவில் விமான போக்குவரத்து துறை தலைவர் அசாருதீன் அப்துல் ரஹ்மான் ஊடகங்களுக்கு இந்த தகவலை தெரிவித்தார். மேலும் தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடர்த்தியான மற்றும் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பயணத்திற்கான காரணம் குறித்து முதலில் தெரியவில்லை. இருப்பினும் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றதாக கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply