சிறி சபாரத்தினம் அவர்களின் 30 வது நினைவுதினம் சிறிரெலோ கட்சியினால் அனுஷ்டிப்பு(படங்கள் இணைப்பு)

1தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவையொட்டி சிறிசபாரத்தினம் அவர்கள் சுட்டக்கொள்ளப்பட்ட இடமாக கருதப்படும் யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு, கோகுல வீதி அன்னங்கை தோட்டவெளியில் இன்று(05.05.2016) மாலை 5மணியளவில் சிறி சபாரத்தினம் அவர்களின் பெயரில் 2007 ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட சிறிரெலோ கட்சியின் ஏற்பாட்டில் அக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளர் திரு.செந்தூரன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் திரு. டொமினிக் ரஞ்சன்(மொட்டை மாமா) மற்றும் திரு.சிவம் உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் திரு.சூரி,ஜெயம் மற்றும் கோபி ஆகியோருடன் உதயராசா அறகட்டளை நிலையத்தின் ஸ்தாபகர் திரு.ஜனகன்,சிறிரெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் திரு ப.கார்த்திக் ஆகியோரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்

மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய திரு.செந்தூரன் சிறி ரெலோ கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து முதன்முதலாக தமது கட்சியே சிறிசபாரத்தினம் அவர்களுக்கு இவ்விடத்தில் அஞ்சலி செலுத்திவருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1

2

3

4

5

6

 

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply