ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 10 பேர் பலி

talipan-2ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நீதிமன்ற ஊழியர்களை ஏற்றிகொண்டு வந்த வாகனம் ஒன்றை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில் 10 பேர் பலியாகினர். மக்கள் நெருக்கம் அதிகமாக காணப்படும் காலை வேளையில் இந்த வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால், பொது மக்கள் பீதி அடைந்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் காயமும் அடைந்தனர். பலியானவர்களில் நீதிமன்றம் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் அடங்குவர். தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கும் பொறுப்பேற்கவில்லை. தலீபான் தீவிரவத இயக்கத்துக்கு புதிய தலைவர் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி காபூலில் நடைபெற்ற தாக்குதலில் 64 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply