பாகிஸ்தானில் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு: 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

pksபாகிஸ்தானில் குவெட்டா நகரில் ஆல்மோ சவுக் சந்தை எப்போதுமே மக்கள் நெரிசல் மிகுந்த சந்தை ஆகும். அந்த சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்று வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையின் வெளியே பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

 

இருப்பினும் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

குண்டுவெடிப்பு பற்றிய தகவல் அறிந்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பிவைத்தனர்.

 

இந்த குண்டுவெடிப்பால் அந்த சந்தையில் உள்ள பல கடைகளின் ஜன்னல்கள், சுவர்கள், சந்தையையொட்டி அமைந்துள்ள வீடுகள் சேதம் அடைந்தன.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply