ஈராக் கார் குண்டு தாக்குதலில் 18 பேர் பலி: ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

iraqஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் வசம் இருந்த திக்ரித் நகரம் கடந்த ஆண்டு (2015) ஏப்ரல் மாதம் மீட்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று அந்த நகரம் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினார்கள். திக்ரித்தில் உள்ள சோதனை சாவடிக்கு வாகனங்களில் வந்த தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பில் இருந்த ராணுவ வீரர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.அதில் 5 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த 2 பொது மக்களும் பலியாகினர். உடனே அங்கிருந்த போலீசார் சுட்டதில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.

திக்ரித் நகரில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் மேலும் 2 தீவிரவாதிகள் தாங்கள் சென்ற வாகனத்தில் நிரப்பியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தனர்.

அதில் 11 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 பேர் ராணுவ வீரர்கள். இவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர 21 பேர் காயம் அடைந்தனர். இந்த 2 தாக்குதல்களிலும் மொத்தம் 18 பேர் பலியாகி உள்ளனர். இத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply