மக்களின் கேள்விக்கு ஏற்ப புதிய கட்சி உருவாக்கப்படும்: பசில்

BASILபுதிய அரசியல் கட்சியொன்று அவசியம் என மக்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப புதிய கட்சியொன்றை நாம் உருவாக்குவோம் என முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சிலர் எப்போது கட்சி உருவாக்கப்படும் எனக் கேட்கின்றனர். அந்த நாள் குறித்து யாருக்கும் சொல்லத் தேவையில்லை. இருப்பினும், நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக அந்த நாள் மிக அண்மையில் வந்து கொண்டிருக்கின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நிவித்திகல, கரவிட கூட்டமொன்றில் உரையாற்றும் போது பசில் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply