சம்பந்தனை கொலை செய்ய சதித்திட்டம்..! அம்பலப்படுத்தியவருக்கு நேர்ந்த அவலம்

sampanthanஎதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படும் நபர் தற்போது அச்சுறுத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தகவல் வழங்கியதன் பின்னர் குறித்த நபரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அச்சுறுத்தி வருவதாக அந்த நபர் எனக்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) மாநகரம் யாழ்ப்பாணத்துடன் இரட்டை உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வுக்கு லண்டன் பயணமாவதற்கு முன்னர் குறித்த நபர் தனக்கு அழைப்பினை ஏற்படுத்தி இந்த விடயத்தினை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

லண்டனுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பலப்பிடியவை சேர்ந்த ஒருவர் தனக்கு மின்னஞ்சல் மற்றும் அழைப்பினை ஏற்படுத்தி தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply