சோமாலியாவில் மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு

சோமாலியா, கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். சோமாலியா தலைநகர் மொகதிசுவில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. மொகதிசுவின் மேற்கு பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதி ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

இது ஒரு கார் குண்டுவெடிப்பாக இருக்கும் என்று கேப்டன் முகமது ஹூசைன் தெரிவித்தார். கடைகள் மற்றும் உணவு விடுதிகள் அதிகம் நிறைந்த பகுதியில் இந்த குண்டு வெடித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தலைநகரில் இதுபோன்ற தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் அல் ஷபாப் அமைப்பு, இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply