காத்தான்குடி வன்முறைகள் – இஸ்லாமிய பயங்கரவாதம் துடைத்தெறியப்படல் வேண்டும்

காத்தான்குடியில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற இஸ்லாமிய மத பயங்கரவாதம் குறித்து அரசு மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உரிய விசாரணைகளை மேற்கொள்வதுடன், நாட்டிலிருந்து இஸ்லாமிய பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெளிநாட்டு நிதி உதவிகளுடன் இந்த நாட்டில் இஸ்லாமிய மத பிரச்சாரம் என்னும் பெயரில் மத பயங்கரவாதமும், அடிப்படைவாதமும், வெறுப்பும் முஸ்லிம்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றன.

காத்தான்குடி வன்முறைகளில் தொடர்புபட்ட ஒரு தரப்பு வெளிப்படையாகவே ISIS இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் தரப்பு என்பதனை காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் முஸ்லிம்கள் மூலம் அறிந்துகொள்ள முடியுமாக உள்ளது. மேற்படி அமைப்பு நாடு முழுவதும் ஆதரவாளர்களை உருவாக்கிக் கொண்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

இஸ்லாமிய பயங்கரவாதத்தை போதிக்கும், ஆதரிக்கும் அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் காத்தான்குடி பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் முஸ்லிம்களின் இருப்பிற்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளன.

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம், தீவிரவாதம், அடிப்பாடைவாதம் மற்றும் மத வெறுப்புணர்வு ஆகியவற்றை நேரடியாகவும், மறைமுகமாகவும் போதிக்கும் அமைப்புகள்,

தனிநபர்கள் குறித்தும், அவ்வாறான அமைப்புகளிற்கு கிடைக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு பண உதவிகள் குறித்தும் அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பினரும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இந்த செயற்பாடுகளில் அரசிற்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் இந்த நாட்டில் வாழும் அமைதியை விரும்பும் முஸ்லிம்கள் உட்பட அனைத்துத் மக்களும் தமக்குத் தெரிந்த அனைத்துத் தகவல்களையும் வழங்கி பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply