சீனாவில் தங்கச் சுரங்க விபத்துகளில் 10 பேர் பலி

வல்லரசு போட்டியில் இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் சீனாவில் ஏராளமான நிலக்கரி மற்றும் தங்கச் சுரங்களில் இருந்து கனிமங்களை வெட்டி எடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.இவற்றில் சில சுரங்கங்கள் மட்டுமே உரிய முன்அனுமதி பெற்றும் முறையான பாதுகாப்பு அம்சங்களுடனும் செயல்படுகின்றன. பல சுரங்கங்கள் முன்அனுமதி இல்லாமலும் பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமில்லாத ஆபத்தான சூழலிலும் இயங்குகின்றன.

இந்நிலையில், இங்குள்ள ஹேனான் மாகாணத்தின் லிங்காபோ நகரில் இயங்கி வந்த குயின்லிங் தங்கச் சுரங்கத்தில் நேற்றிரவு திடீரென கார்பன் மோனாக்சைட் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விஷவாயுவில் சிக்கி மூச்சுத் திணறிய 8 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல், அருகாமையில் உள்ள மற்றொரு சுரங்கத்திலும் நேற்று ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் மேலும் இரு தொழிலாளிகள் பலியாகினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply