பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் காயம்

பிரான்ஸின் வடக்கு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து போலீஸார் தரப்பில்,”பிரான்ஸின் வடக்கு பகுதியான லீலே நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் தாக்குதலில் உள்ளூர் குற்றவாளிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply