வங்கதேசத்தில் குண்டுவெடிப்பு: மூன்று பேர் பலி, பலர் படுகாயம்

வங்கதேசத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சில்லெட் மாகாணத்தில் இருவேரு வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் சிக்கி போலீசார் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமுற்றிருப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் உள்பட இருவர் கொல்லப்பட்ட நிலையில் சுமார் 30க்கும் அதிகமானோர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமுற்றிருப்பதாக காவல் துறையை சேர்ந்த ரோகோன் உத்தின் என்ற அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக டாக்கா விமான நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள தற்கொலைப்படை தாக்குதலில் தீவிரவாதியை தவிர வேறு யாரும் கொல்லப்படவில்லை.

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வங்கதேச கமாண்டோ படை வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐந்து மாடி குடியிருப்பு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 78 பேர் மீட்கப்பட்டனர். மேலும் பலர் மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உள்ளிட்ட அமைப்புகள் வெளிநாட்டினர் கொல்லப்படுவதற்கு போட்டி போட்டு பொறுப்பேற்று வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply