நாட்டின் பொருளாதார முகாமைத்துவ செயற்பாடு ஜனாதிபதி வசம்

நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் தீர்மானங்களை முன்னெடுக்கும் அமைச்சரவை உப குழுவின் பிரதான பொறுப்பை உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையேற்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.அடுத்த பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப குழுக் கூட்டத்தின் தலைமையை ஜனாதிபதி ஏற்கவுள்ளார்.

தற்பொழுது பொருளாதாரக் குழுவின் பிரதானியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார். இக்குழுவின் நடவடிக்கைகளை மாற்றுத் திசையை நோக்கி பயணிக்கச் செய்வதற்கே ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் இந்த குழுவை பொறுப்பேற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply