தந்தை செல்வா நினைவு பேருரை நாளை கொழும்பில்

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது நினைவு தின த்தை முன்னிட்டு நாளை கொழும்பில் நினைவுப் பேரு ரை நிகழ்வு இடம்பெறவுள்ளது. பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு நினைவுப் பேருரை ஆரம்பிக்கவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் இலங்கையில் அதிகாரப் பகிர்வு எனும் தலைப்பில் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார்.

 

மௌன அஞ்​சலி, தமிழ்த் தாய் வாழ்த்து, தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்துதல் ஆகியவற்றைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையுரை ஆற்றவுள்ளார்.

 

கௌரவ விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொள்ளவிருப்பதுடன், அரசியல் பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply