அதிமுக தலைமை அலுவகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்

”இரு அணிகள் இடையே பேசிக்கொண்டிருக்கிறோம், பேச்சுவார்த்தைக்கான சுமூக சூழல் உருவாகியிருக்கிறது’’ என ஓ.பி.எஸ் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுக தலைமை கழகத்தில் இருந்து சசிகலா படத்தை உடனே அகற்ற வேண்டும் என ஓ.பி.எஸ் அணி சார்பாக மதுசூதனன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்திருந்தார்.

அந்த அறிக்கையில், “சசிகலாவின் புகைப்படங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகமான தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply