பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமருக்கிடையில் இன்று சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய பிரதமர்நரேந்திர மோதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.இந்த விஜயத்தின் போது இந்திய சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோரை பிரதமர் சந்திக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று பிற்பகல் இந்தியாவை சென்றடைந்தனர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் பிரதம ஏற்பாட்டாளர் சஞ்சே வர்மா உள்ளிட்ட அதிகாரிகள் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்றனர்.

பிரதமரின் இந்திய விஜயத்தில் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா , மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply