ஏறாவூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான 19 படகுகளும் கரை திரும்பின

மட்டக்களப்ப, ஏறாவூர் பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கைக்காக நேற்று காலை சென்று கரை திரும்ப தாமதமாகியிருந்த 19 மீன்பிடி படகுகளும் மீண்டும் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளது.குறித்த படகுகள் உரிய நேரத்தில் கரைக்கு திரும்பாததன் காரணமாக அவை காணாமல் போயிருக்கலாம என்று பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

ஏறாவூர் பகுதியில் நேற்று மாலை வீசிய கடுமையான காற்று காரணமாக படகுகள் திசை மாறி சென்றிருக்கலாம் என்று நம்பப்பட்ட நிலையில், அவற்றை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

எவ்வாறாயினும் மீன்பிடி நடவடிக்கைக்காக சென்றிருந்த 67 மீனவர்களும் படகுகளுடன் மாலை 6.00 மணியளவில் மீண்டும் கரை திரும்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply