புதிய இராணுவத் தளபதி இன்று தீர்மானம்?

இலங்கையின் புதிய இராணுவத் தளபதி நியமனம் தொடர்பான அறிவிப்பு, இன்று இடம்பெறலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகம் இந்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் கூட்டுப் படைகளின் தளபதியாகப் பணியாற்றிய எயர் மார்ஷல் கோலித குணதிலக கடந்த ஜூன் 15ஆம் திகதி ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து தற்பொழுது அந்தப் பதவி வெற்றிடமாக உள்ளது.

இந்தப் பதவிக்கு, தற்போது சேவையில் உள்ள முப்படைகளின் தளபதிகளில் சிரேஷ்ட நிலையில் உள்ளவரான இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாவட்ட இராணுவக் கட்டளை பீடத்தின் முன்னாள் தளபதியும் தற்போதைய இராணுவத் தலைமை அதிகாரியாகவும் செயற்படும் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இலங்கை இராணுவத்தின் அடுத்த தளபதியாக நியமிக்கப்படும் சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply