சவூதியில் 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவூதி அரேபியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய நான்கு தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வளைகுடா நாடான சவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள குவாடிப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தீவிரவாதிகள் நால்வருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், எந்த முறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply