ஐ.எஸ். மற்றும் அல்-காய்தா தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு: 2 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை

ஐ.எஸ். மற்றும் அல்-காய்தா தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 2 நிறுவனங்கள், 4 தனிநபர்கள் மீது ஐ.நா. சபை பொருளாதார தடைகளை விதித் துள்ளது. அல்-காய்தாவுடன் தொடர் புடைய ஜுண்ட் அல்-அக்சா, ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர் புடைய ஜெய்ஷ் காலித் பின் அல்-வாலித் ஆகிய நிறுவனங்கள் சிரியாவில் செயல்பட்டு வரு கின்றன. இதேபோல மேலும் 4 தனிநபர்களுக்கு இந்த தீவிர வாத அமைப்புகளுடன் நெருங் கிய தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து 2 நிறுவனங் கள், 4 தனிநபர்கள் மீது பொரு ளாதார தடை விதிக்கும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் கொண்டு வரப் பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply