கண்ணீர் விட்டழுதார் நீதிபதி இளஞ்செழியன்

நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் உறவினர்களின் காலில் வீழ்ந்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கண்ணீர் விட்டழுதார். நல்லூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திர என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை, யாழ்.போதனா வைத்தியசாலையில் பொறுப்பேற்பதற்காக, உயிரிழந்தவரின் உறவினர்கள், இன்று யாழ். வந்து இருந்தனர்.

சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக இன்று யாழ்.போதனா வைத்தியசாலை பிணவறைக்கு, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வந்திருந்தவேளை அங்கு நின்றிருந்த நீதிபதி, உறவினர்களைக் கண்டதும் கதறி அழுதார். அத்துடன் அவர்களின் காலிலும் வீழ்ந்து அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களின் மனதை உருக்கி இருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply