நல்லூர் சம்பவத்திற்கு கூட்டமைப்பு கண்டனம்

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.சம்பவம் தொடர்பான சதியை தௌிவுபடுத்த வேண்டும் என, அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் குடா நாட்டில் முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து பொலிஸ் மா அதிபர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூட்டமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply