யாழ். துப்பாக்கிப் பிரயோகம் பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரண்

நல்லூரில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜரானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

செல்வராசா ஜயந்தன் என்ற 39 வயதான நபரே யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply