எதிர்வரும் 2ஆம் திகதி நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டம்

அர­சாங்­கத்­துக்கு எதி­ராக எதிர்­வரும் 2 ஆம் திகதி நாட­ளா­விய ரீதியில் பாரி­ய­ ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெடுக்­க­வுள்­ள­தாக கூட்டு எதி­ர­ணியின் ஒருங்­கி­ணைப்­பா­ளரும் எம்.பியு­மான ரஞ்சித் சொய்சா தெரி­வித்தார். அரச சொத்­து­களை தனியார் மயப்­ப­டுத்தல், சைட்­டத்தை தடை செய்­யாமை, எட்கா உடன்­ப­டிக்கை, காணாமற்போனோர் தொடர்­பான சட்­ட­ மூலம் மற்றும் தேர்­தலை தொடர்ந்து பிற்­போடும் செயற்­பாடு உள்­ளிட்ட மக்கள் விரோத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரா­கவே இந்த எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இது குறித்து வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், கூட்டு எதிர்க்­கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப் ­ப­டுத்­து­கின்ற அர­சியல் கட்­சிகள், தொழிற்­சங்­கங்கள் மற்றும் மாணவ ஒன்­றி­யங்கள் உள்­ளிட்ட அமைப்­புகள் பலவும் இந்த எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் கலந்து கொள்­ள­வுள்­ளன. இந்த எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் நக­ருக்கு நகர் கிரா­மத்­திற்கு கிரா­மத்­திற்கு கிராமம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

மேலும் பிர­தான அரச நிறு­வ­னங்­க­ளுக்கு முன்­பாக ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டவும் பிர­தான நக­ரங்­களில் எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் மக்கள் சந்திப்புகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply