பிஞ்சு குழந்தையை பார்சல் கட்டி கொரியர் மூலம் அனாதை இல்லத்திற்கு அனுப்பிய தாய்

சீனாவின் தாதாவை சேர்ந்த கொரியர் டெலிவரி பாய், புழோவின் ஜினான் மாவட்டத்தில் கொரியர் ஒன்றை எடுத்துள்ளார். அந்த பார்சல் அந்த மாவட்ட குழந்தைகள் நல நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், பார்சலுடன் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த டெலிவரி பாய், பார்சலை பிரித்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

அந்த பார்சலுக்கு உள்ளே பிறந்த பிஞ்சு பெண் குழந்தை இருந்துள்ளது. பார்சலில் குழந்தையை கண்டு கூடிய மக்கள் தண்ணீர் கொடுத்துள்ளனர்.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

தற்போது, மருத்துவமனையில் குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தையின் தாயை கண்டுபிடித்துள்ளதாக மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். 24 வயதான தாய் லுவோ, குழந்தையை பார்சல் அனுப்பியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், அவரிடம் கைவிடப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply