மக்கள் நீதிமன்றத்தில் கை வைக்க முடியாது : மஹிந்த ராஜபக்ஷ

ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்தது வெறுமனே ஒரு கண்துடைப்பு எனவும், இந்த ஊழலுக்குப் பின்னால் பாரிய குற்றவாளிகள் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அர்ஜுனன் அலோசியசின் பணத்தினால், வீடொன்றை கொள்வனவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதனைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்தமை குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மக்கள் நீதிமன்றத்தில் கை வைக்க யாருக்கும் முடியாது. நாட்டில் என்ன நடைபெறுகின்றது என்பதை மக்கள் நன்கு அவதானித்த வண்ணமே உள்ளனர். மக்கள் தற்பொழுது தீர்மானம் எடுத்து விட்டனர். இதன்பிறகும் மக்களை ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply