ஐ.தே.க. யின் கொள்கையே ஸ்ரீ.ல.சு.க. தலைவரினதும் கொள்கை : மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் முன்னணி குழுவாக ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் நேற்று  கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வதோ, தனியார் மயப்படுத்துவதோ இல்லையெனவும், ஐ.தே.க.யின் கொள்கையே அதுவாகும் எனவும் இதனால், தமது கட்சியின் கொள்கையுடன் நேரடியாக முரண்படும் ஒரு கட்சியுடன் தொடர்ந்தும் ஆட்சியில் ஒட்டியிருக்க முடியாது என தற்போதைய ஸ்ரீ ல.சு.க.யின் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று முன்தினம் ஊடகங்களிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply