மஹிந்தவின் உறவினர்களுக்கு எதிராகவும் வழக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க விசேட நீதிமன்றம் ஒன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு எதிராக விசேட நீதிமன்றம் அமைத்து, வழக்கு தொடர்ந்து, தண்டனை வழங்கி, சிறையில் அடைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தயோசனை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் நிலைப்பாடு குறித்து தாம் வேதனை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply