சர்வஜன வாக்கெடுப்பை நடாத்த தேர்தல்கள் திணைக்களம் தயார் : மஹிந்த தேசப்பிரிய

சர்வஜன வாக்கெடுப்பை நடாத்த தீர்மானித்தால் அதனை நடாத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.வாக்கெடுப்பை நடாத்த அனுமதி வழங்கப்பட்டால் 6 வாரங்களுக்குள் வாக்கெடுப்பை நடத்தலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அது தொடர்பான விடயங்களை தவிர வாக்கெடுப்பு தொடர்பில் சுயமான முடிவை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply