வடக்கு – தெற்கு இனவாதிகளிடையே உத்தியோகப்பற்றற்ற ஒப்பந்தங்கள்:அமைச்சர் மனோகணேசன்
வடக்கு – தெற்கு இனவாதிகளிடையே உத்தியோகப்பற்றற்ற ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் அனைவரும் உறவினர்களாவர். இப்படியான உறவினர்கள் சிறிதளவே இருக்கின்றனர். இவர்களை ஓரம்கட்டி இலங்கையர்கள் என்பதன் கீழ் பயணிப்போம் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்குக்குச் சென்று ஐ.நா. பொதுச் சபை அமர்வில் உரையாற்றவுள்ளார். அவர் உரையாற்றும்போது அங்குள்ள இனவாதக் குழுக்கள் அவருக்கெதிராகப் போராட்டங்களைச் செய்யவுள்ளனர். பரவாயில்லை. இன்று இந்த நாட்டில் சகவாழ்வை முன்னிலைப்படுத்திப் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
அதனைப் புரிந்துகொள்ள முடியாத வர்களே இன்னும் இனவாதத்தை தலைதூக்கச் செய்கின்றனர். பன்னாட்டுச் சமூகத்தில் மட்டுமல்ல, இனவாதம் எமது உள்நாட்டிலும் இருக்கின்றது. வடக்கிலும், தெற்கிலும் இருக்கின்றனர்.
வடக்கிலுள்ள இனவாதிகள் வாய்திறக்கும்போது தெற்கிலுள்ள இனவாதிகளுக்கு அவல் கிடைக்கின்றது. அதேபோல தெற்கிலுள்ள இனவாதிகள் வாய்திறந்தால் வடக்கிலுள்ள இனவாதிகளுக்கு அவல் கிடைக்கிறது. வடக்கு–தெற்கு இனவாதிகளிடையே உத்தியோகப்பற்றற்ற ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் அனைவரும் உறவினர்களாவர். அதனால் இப்படியான உறவினர்கள் சிறிதளவே இருக்கின்றனர். இவர்களை ஓரங்கட்டி இலங்கையர்கள் என்பதன் கீழ்ப் பயணிப்போம்.
இவற்றைக் கணக்கில் எடுக்கவேண்டாம். தேர்தல் காலத்தில் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றைய நேரங்களில் இலங்கையர்களாக நினைத்துக் கொள்ளுங்கள். இதனைப் புரிந்துகொண்டால் ஜெனிவா, ஐ.நா. பொதுச் சபை செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. அதேபோல ஹுசைன், டிரம்ப், நரேந்திர மோடி ஆகியோருடன் பேசுவதற்கும் அவசியம் ஏற்படாது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply