ஜனாதிபதி குழுக்களுடனான பேச்சுவார்த்தை : வைத்தியர்கள் சங்கம் புறக்கணிப்பு

பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தலைமையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை புறக்கணிப்பதற்கு இலங்கை வைத்தியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 6ம் திகதி குறித்த குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கை வைத்தியர்கள் சங்கம் ஏற்றுக்கொள்ளாத விடயங்களை குறித்த குழுவின் அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தமையாலேயே இன்று நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையை வைத்தியர்கள் சங்கம் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் வைத்தியர்கள் கூடி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வரை குறித்த குழுவுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என வைத்தியர்கள் சங்கத்தின் முகாமைத்துவ குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த சட்ட மா அதிபர் திணைக்களம், உயர்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கும் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைக்கு வைத்தியர்கள் சங்கம் பங்கேற்கப்போவதில்லை என குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவிற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் சங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply