நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது: விஜயகலா மகேஸ்வரன்

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-

நீதித்துறை , ஊடக துறை , சட்டத்துறையும் விற்கப்படுகின்றது. இந்த ஜனநாயக நாட்டில் நல்லாட்சி நிலவும் காலத்தில் அவை விற்கப்பட்டு உள்ளது.
ஒரு சில பொறுப்பு உள்ள அதிகாரிகளால் தான் அவை விற்கப்பட்டன. அதனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் தலை குனிந்ததுள்ளது. எனவே அவ்வாறானவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply