அடுத்த ஆண்டிற்கான அதிகாரப்பூர்வமான நிறம் இதுதான் !

அடுத்த ஆண்டிற்கான(2018), அதிகாரப்பூர்வமான நிறம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் இப்படி நிறம் அறிவிக்கப்படுவது வழமை. அதேபோல் இம்முறையும் அடுத்த வருடத்திற்கான நிறம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டிற்கான அதிகாரப்பூர்வமான நிறம் இதுதான் !

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், பேண்டோன் என்ற நிறுவனமானது, வண்ணங்கள் சம்பந்தமான
ஆராய்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.மேலும் வர்ணப்பூச்சுக்களில் தொடங்கி எழுதும் கலர் பென்சில்கள் வரை தயாரித்து விற்பனை செய்தும் வருகிறது.

ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்திற்கான அதிகாரப்பூர்வ நிறத்தை இந்த அமைப்பு வெளியிடும். கடந்த 2010ல் இருந்து இந்த வழக்கத்தை கொண்டு இருக்கிறது. இதற்காக உலகில் இருக்கும் முக்கியமான நாடுகள் அனைத்திலிருந்தும் சில நபர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களின் சந்திப்பு யாருக்கும் தெரியாத இடத்தில் இரகசியமாக நடக்கும். மேலும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதும் இரகசியமாக வைக்கப்படும். பின்னர் டிசம்பர் மாதத்தில் சரியாக நிறத்தை தேர்வு செய்துவிட்டு அறிவிப்பை வெளியிடுவார்கள்.

இந்த நிலையில் 2018ம் ஆண்டிற்கான, அதிகாரப்பூர்வ நிறத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அந்த நிறுவனம் ஊதா நிறத்தை (purple) தேர்வு செய்திருக்கிறது.

இது செல்வத்தை குறிக்கும் என்பதாலும், 2018ம் வருடம் அதிக செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகில் மாசுபாட்டின் அளவை குறைக்கும் நோக்கிலும், புதிய தொடக்கத்தை குறிக்கும் என்பதாலும், 2017ம் ஆண்டிற்கான நிறமாக பச்சை நிறத்தைதத் தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply