இங்கிலாந்தில் சிறுவனுக்கு சிகரெட் விற்க மறுத்த இந்தியர் அடித்துக்கொலை

இங்கிலாந்து வாழ் இந்தியர் விஜய் படேல் (49). இவர் லண்டனில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். அங்குள்ள மலைப்பகுதியில் கடை நடத்தி வந்தார்.சம்பவத்தன்று இவரது கடைக்கு 16 வயது சிறுவன் உள்பட 3 பேர் வந்தனர் அவர்கள் புகைக்க சிகரெட் கேட்டனர். சிறுவர்கள் என்பதால் சிகரெட் விற்பனை செய்ய விஜய் படேல் மறுத்துவிட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து விஜய் படேலை அடித்து உதைத்தனர். பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டனர்.

இதனால் மார்பு மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த விஜய் படேல் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply