தேர்தலுக்கா பொருட்கள் விநியோகித்தால் சட்ட நடவடிக்கை : மஹிந்த

தேர்தலை மையப்படுத்தி பொருட்கள் விநியோகித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது குறித்துக் கண்டறிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட குழு அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலை மையப்படுத்தி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை விநியோகிப்பவர்களுக்கு எதிராக முறைப்பாடு கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதன் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply