ஜனாதிபதி மாளிகைக்கு வந்த கனடா பிரதமரை கட்டிப்பிடித்து வரவேற்ற மோடி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அதன்பின், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி திரும்பிய கனடா பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று காலை ஜனாதிபதி மாளிகை வந்தார். காரில் இருந்து இறங்கிய அவரை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்றார். பின்னர் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

கனடா பிரதமரை மத்திய அரசு புறக்கணிப்பதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளித்ததும், மோடி நேரில் சென்று வரவேற்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு பிறகு கனடா பிரதமர், டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜையும் சந்தித்து பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply