இலங்கையின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ள வேண்டும் - மனோ

Wednesday, May 22nd, 2013 at 16:43 (SLT)

பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். மேலும் வாசிக்க >>>


பௌத்தர்கள் மத்தியில் சகிப்பின்மையும், பக்கசார்பும் வளர்ந்து வகிறது - அமெரிக்கா

Wednesday, May 22nd, 2013 at 15:27 (SLT)

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பௌத்தர்களால் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், முஸ்லிம்களுக்கு எதிராக சில பௌத்தர்கள் சகிப்புத் தன்மையற்று செயற்படுவதாகவும் அமெரிக்க அரசுத்துறையின் 2012ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கை கூறியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது கடுமையான தாக்குதல்களை பௌத்தர்கள் நடத்துவதாகவும், அவர்கள் மேலும் வாசிக்க >>>


மட்டக்களப்பில் இந்திய வீட்டுத் திட்ட பணிகள் இன்று ஆரம்பம்

Wednesday, May 22nd, 2013 at 14:58 (SLT)

கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக நிர்வாக பிரிவிலுள்ள மூன்று கிராமங்களில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வுகளின் போது, சிங்கள கிராமமான மங்களாகம கிராமத்திலே முதலாவது வைபவம் இடம்பெற்றது. மேலும் வாசிக்க >>>


ஒக்லஹொமா மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ஒபாமா பணிப்புரை

Wednesday, May 22nd, 2013 at 14:06 (SLT)

சூறாவளியின் தாக்கத்திற்கு இலக்கான ஒக்லஹொமா பகுதியில் மீட்புப் பணிகளை துரிதமாக முன்னெடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி பரக் ஒபாமா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் சில மீட்கப்பட்டுள்ளதுடன், உயிருடன் எவரையும் மீட்பதற்கான வாய்ப்புக்கள் இனி இல்லையென மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க >>>


இலங்கை - ரஷ்ய வர்த்தகப் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை

Wednesday, May 22nd, 2013 at 13:26 (SLT)

இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகப் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ரஷ்யாவில் நடைபெறவுள்ள வர்த்தகக் கைத்தொழில்  கண்காட்சியில் பங்குபற்ற இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க >>>


இலங்கை மீனவர்கள் 11 பேர் விடுதலை

Wednesday, May 22nd, 2013 at 13:05 (SLT)

இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட, 11 இலங்கை மீனவர்கள், விசாரணையில் வழி தவறி வந்தது தெரியவந்தது.  இதையடுத்து, இலங்கை மீனவர்கள் நேற்று (21) மதியம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  புதுச்சேரி அருகே, 90 கி.மீ., தொலைவில், சில தினங்களுக்கு மேலும் வாசிக்க >>>


ஜெனிவாவில் அமைச்சர் மைத்திரிபாலவிற்கு பலத்த பாதுகாப்பு

Wednesday, May 22nd, 2013 at 12:23 (SLT)

ஜெனிவா சென்றுள்ள இலங்கையின் சுகாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவிற்கு அங்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இவர் பயணிக்க கவச வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவாவில் நடைபெறும் உலக சுகாதார மாநாடுகளில் பங்கேற்கவென மைத்திரிபால மேலும் வாசிக்க >>>


யாழ். இராணுவ முகம்களை பலாலிக்கு மாற்ற நடவடிக்கை

Wednesday, May 22nd, 2013 at 8:53 (SLT)

யாழ்ப்பாணத்தின் இராணுவ முகம்கள் பல பலாலிக்கு மாற்றப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் காணப்படும் இராணுவ முகாம்களே இவ்வாறு பலாலிக்கு மாற்றப்படவுள்ளது. பாதுகாப்பு காரணிகளுக்காக மூன்று இராணுவ முகாம்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இயங்கும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க >>>


இலங்கை தமிழர் நலனில் காங்கிரஸ் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது

Wednesday, May 22nd, 2013 at 8:07 (SLT)

இலங்கை தமிழர் நலன்களை உறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி மட்டுமே உண்மையான அக்கறை கொண்டுள்ளது எனவும் தமிழ் நாட்டிலுள்ள ஏனைய கட்சிகள் தமிழர் பிரச்சினையில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன எனவும் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  தமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் மேலும் வாசிக்க >>>


இம்ரான் கான் நலமடைகிறார்!

Wednesday, May 22nd, 2013 at 7:27 (SLT)

பாகிஸ்தான் அரசியல்வாதியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் முதுகுத் தண்டுக்கு முட்டுக் கொடுக்கும் பெல்ட் அணிந்தபடி 300 மீட்டர்கள் நடந்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு லாகூரில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காயம் அடைந்த பிறகு இப்போதுதான் அவர் முதல் முறையாக எழுந்து நின்றதுடன் மேலும் வாசிக்க >>>


இனப்படுகொலை தொடர்பான குவாதெமாலா தலைவர் எதிரான தீர்ப்பு ரத்து

Tuesday, May 21st, 2013 at 21:42 (SLT)

குவாதெமாலா நாட்டின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் எஃப்ரெய்ன் ரியோஸ் மோன்து இனப்படுகொலையில் ஈடுபட்டதாக குற்றங்காணப்பட்டு வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோன்து மீது கீழ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் இறுதி வாரங்களில் வழங்கப்பட்டிருந்த சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க >>>


புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் இந்தியாவில் கைது

Tuesday, May 21st, 2013 at 14:06 (SLT)

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நைரேபிக்கான விமானத்தில் பயணம் செய்ய முயற்சித்த போது குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலத்திரனியல் பொறியியலாளரான குறித்த நபர் வான் வழியாக இந்தியாவை அடைந்ததாக முதலில் தெரிவித்துள்ளார். எனினும், நீண்ட விசாரணைகளின் பின்னர் கடல் வழியாக தாம் இந்தியாவை அடைந்ததாகவும், மேலும் வாசிக்க >>>


அமெரிக்க சூறாவளிக்கு 91 பேர் பலி

Tuesday, May 21st, 2013 at 13:46 (SLT)

அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் ஏற்பட்ட கடுமையான சூறாவளி காரணமாக 20 குழந்தைகள் உட்பட 91 பேர் பலியாகியுள்ளனர்.  இதில் இரண்டு பள்ளிகள் மற்றும் பல வீடுகள் பலத்த சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  மூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக் குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.  மேலும் வாசிக்க >>>


கச்சதீவை மீட்க கோரி மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்

Tuesday, May 21st, 2013 at 13:29 (SLT)

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா 21.05.2013 திங்கள்கிழமை ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.  அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறி இருப்பதாவது:-  கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு மீட்பது தொடர்பாக கடந்த 3-5-2013 அன்று தமிழக சட்டசபையில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் வாசிக்க >>>


தென்கொரியாவின் கடல்பகுதியில் வடகொரியா 5வது ஏவுகணை தாக்குதல்

Tuesday, May 21st, 2013 at 10:51 (SLT)

தென்கொரியாவின் கடல்பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணையை வீசி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாட்களில் வடகொரியா வீசும் 5வது ஏவுகணை இதுவாகும். அணு ஆயுதங்களை தயாரித்து வரும் வடகொரியா மீது ஐ.நா. பொருளாதார தடை விதித்தது. இந்நாட்டுக்கான பொருளா தார வழிகளை அமெரிக்கா மூடி வருகிறது. இதனால் கோபம் அடைந்த வடகொரியா தனது அண்டை நாடும், மேலும் வாசிக்க >>>