நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் சிறப்பான பரிந்துரைகள்

January 8th, 2012 admin Posted in கருத்துக்களம் No Comments »

கேள்வி:- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை தொடர்பாக உங்களது பார்வை எத்தகையது?

பதில்:- மிகத் தெளிவான வகையில் யுத்த காலத்திலும் அதற்கு பின்னணியாக அமைந்த இனப் பிரச்சினையும் அதனோடு தொடர்புடைய ஏனைய பிரச்சினைகளும் தொடர்பாக் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட விரிவான அறிக்கையே இதுவாகும். கிடைக்கப்பட்ட பல கடிதங்களும் பலதரப்பட்ட சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான சாட்சியங்களையும் அடிப்படையாக வைத்து ஆணைக்குழு இந்த அறிக்கை மூலம் தமது பரிந்துரைகளையும் முடிவுகளையும் முன்வைத்துள்ளது. எனது பார்வையில் இது மிகவும் வெற்றிகரமான ஒரு அறிக்கையாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளை யாரும் அழிக்கவில்லை; அவர்களாகவே அழிந்துபோனார்கள்!

November 1st, 2011 admin Posted in கருத்துக்களம் No Comments »

கடந்த வருட இறுதியில் முகப்புத்தக நண்பர் அறிவழகனுடன் முகப்புத்தகத்தில் நான் நடாத்திய விவாதத்தினை இங்கு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சி, இந்து சமுத்திரத்தில் அல்லது தென்கிழக்காசியாவில் அமெரிக்க ஆதிக்கம், சீனாவின் கொள்கை மாற்றம் போன்ற பல விடையங்களை கட்டுரை முன்பகுதி அதிக நேரத்தைச் செலவு செய்திருக்கின்றது. அதில் சில விடையங்களோடு ஒத்துப்போனாலும் பல விடையங்களில் அறிவழகனின் பார்வையில் இருந்து மாறுபடுகின்றேன். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

August 7th, 2011 admin Posted in கருத்துக்களம் No Comments »

வடமாகாணத்தில் உள்ளூராட்சி சபைகள் பலவற்றைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கப்போகிறது என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட அவலங்களை அனுதாபமாக்கிப் பிரசாரம் செய்து தமிழ் மக்களது மனங்களை வெற்றிகொண்டதன் விளைவாக தமிழ்க்கூட்டமைப்பினரால் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்ற முடிந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஒற்றுமையை நோக்கி ஒரு காலடி: பாலன்

February 15th, 2010 admin Posted in கருத்துக்களம் No Comments »

மக்களை நேசிக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு!

அன்புடையீர்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவற்கான எமது 30 வருடங்களுக்கு மேலான விடுதலைப் போராட்டம் பல்வேறு வடிவங்களும் மாற்றங்களும் அடைந்துள்ளது.

எமது மக்களின் நலன்களை மனதில் கொண்டே நாம் போராட முனைந்தோம் என்பதில் எள்ளவும் ஜயமில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மகிந்த சிந்தனையா? இராணுவச் சிந்தனையா? ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாகைசூடும் : தேவன் (கனடா)

December 20th, 2009 admin Posted in கருத்துக்களம் Comments Off

‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே’ – காந்தி.

உண்மையில் மேலே குறிப்பிட்ட வாக்கியம் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பொருந்தும். அதுவும் முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவுக்கே மிகவும் பொருந்தும். புலிகளுக்கெதிரான யுத்தம் இவருக்கு முகவரியை கொடுத்தது.

கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையை அனைத்து வாழ்வியல் மட்டத்திலும் பாதித்திருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது பாராட்டுக்குரியது. இதற்கு கூட்டு இராணுவ முயற்சியும் உறுதியான அரசியல் தலைமையுமே காரணம். இந்த வெற்றியை யாரும் சொந்தம்கொண்டாட முடியாது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button