Archive for November, 2008

புலிகள் இயக்கம் மீதான தடையை அமெரிக்கா நீடித்தது

Sunday, November 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read more..

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ராஜினாமா

Sunday, November 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மும்பை தீவிரவாத தாக்குதலை அடுத்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து, அச்சம்பவத்துக்கு தானும் தார்மீக பொறுப்பேற்று பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ... Read more..

புலிகளின் ஆயுதக்கப்பல் குறித்து இலங்கை உளவுப் பிரிவு உசார்: சிங்கள வார இதழ்

Sunday, November 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புலிகள் அமைப்பினால் வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று தாய்லாந்து கடற்பகுதி ஊடாக இலங்கைக்கு வரவுள்ளதாக பாதுகாப்பு உளவுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து பாதுகாப்பு பிரிவினர் மிக விழிப்புடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. Read more..

விமானப்படையினரின் மிக் 24 ரக போர் உலங்கு வானூர்திகள் இன்று காலை வான் தாக்குதல்

Sunday, November 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

விமானப்படையினரின் மிக் 24 ரக போர் உலங்கு வானூர்திகள் இன்று காலை அக்கராயன்குளம் மேற்கு முறிகண்டி பகுதியில் வான் தாக்குதல் மேற்கொண்டுள்ளன.இன்று காலை 7.30 மணியளவில் விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more..

மட்டக்களப்பு மாவட்டத்தில் 124 பேர் கைது

Sunday, November 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றுக் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தின் போது நடத்தப்பட்ட தேடுதல்களில் மாவட்டத்தின் எட்டுப் பொலிஸ் பிரிவுகளிலும் 11,963 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 124 பேர் கைது செய்யப்பட்டு ... Read more..

கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கு மூவர்கொண்ட உயர்மட்டக்குழு அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்

Sunday, November 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரங்களைப் பகிர்வது பற்றி ஆராய்வதற்கு மூவர் கொண்ட உயர்மட்டக்குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் நியமிக்கவிருப்பதாக, கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.    இந்த நிலையில் 13வது திருத்தச்சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரங்களைப் பகிர்வது பற்றி ... Read more..

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பழைய மாணவன் மலேசியாவில் படுகொலை

Sunday, November 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மலேசிய இளைஞர்கள் நடத்திய தாக்குதல் சம்பவமொன்றில் காயமடைந்த கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பழையமாணவனான சிறிசாரங்கன் (2005 A/L கணிதப்பிரிவு) உயிரிழந்துள்ளார்.    மலேசியாவில் கல்விபயிலும் இந்திய மாணவர்களைக் குறிவைத்து மலேசிய இளைஞர்கள் குழுவொன்று கடந்த 26ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இந்திய மாணவர்கள் ... Read more..

இந்திய உட்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் பதவி விலகினார்

Sunday, November 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மும்பையில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் உட்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக அமைச்சர் சிவராஜ் பட்டீல் அறிவித்துள்ளார்.   அமைச்சர் தனது இராஜினாமாக் கடிதத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிவைத்தார். Read more..

கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னரே வன்முறைகள் அதிகம்: மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்

Sunday, November 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்ட பின்னரே அங்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.    கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு, அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்ட பின்னர் மாகாணத்தில் சமாதானமும், சாதாரண ... Read more..

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள்திறப்பது ஒத்திவைப்பு

Sunday, November 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையைத் திறக்கும் பணிகள் மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது வடபகுதியில் நடக்கும் மோதல்கள் காரணமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையைத் திறக்கும் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம்வரை ... Read more..

இலங்கையிலிருந்து 3 அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு பணிப்பு

Sunday, November 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையில் செயற்பட்டுவரும் மூன்று சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிக்கப்படவிருப்பதாக அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்தார். நோர்வேயைத் தளமாகக் கொண்டியங்கும் நோர்வேஜியன் மக்கள் அமைப்பு (Norwegian Pepples’s Aid) போஃர்ட் (FORUT) நெதர்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் சோஆ (ZOA) ஆகிய சர்வதேச ... Read more..

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் : தி.ஸ்ரீதரன்

Saturday, November 29th, 2008 Posted in ஊடக அறிக்கை | No Comments »

அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட வன்முறையற்ற வாழ்வொன்றை கட்டியெழுப்புவதற்காக நாம் இந்தியாவுடன் கரம் கோர்த்து செயற்பட வேண்டும். இக் கொடூர பயங்கரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அனைவருடைய உறவுகளுக்கும் நாம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். - பத்மநாப ஈழ மக்கள் புரட்சிகர ... Read more..

மும்பை தாக்குதலில் பங்குகொண்ட 6 பேர் பிரித்தானிய பிரஜைகள்

Saturday, November 29th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் பிரித்தானிய குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் பிரிட்டனின் பிராட்போர் நகரின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. லண்டனில் நடந்த பஸ் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டவர்களும் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் ... Read more..

படையினர் ஒதியமலையை அடைந்தனர்

Saturday, November 29th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மணலாறு களமுனையில் நகர்வில் ஈடுபட்டுவரும் 59 ஆவது படையணியில் உள்ள 14வது சிங்க ரெஜிமெண்ட் மற்றும் 12வது சிறீ லங்கா லைற் இன்வன்ற்றி அணிகள் இணைந்து புலிகளின் முன்னரங்க பாதுகாப்பரணை உடைத்து நெடுங்கேணியில் இருந்து தெற்காக 6 மைல் தொலைவில் உள்ள ... Read more..

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் இன்று காலை 6 மணி முதல் ஊரடங்குச் சட்டம்

Saturday, November 29th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் இன்று காலை 6 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.   மாலை 6 மணிவரையில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read more..