Archive for October, 2009

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியெற்றப்பட்டு நேற்றுடன் 19 வருடங்கள் பூர்த்தி

Saturday, October 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன்  பத்தொன்பது வருடங்கள் பூர்த்தியடைந்தன. 1990ஆம்ஆண்டு இம்மக்கள் வடமாகாணத்தில், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளியேறி தற்போது புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். Read more..

தயா மாஸ்டர் , ஜோர்ஜ் மாஸ்டர் குறித்து மீண்டும் விசாரணை

Saturday, October 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இருவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக கொழும்புக் குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். தயா மாஸ்டர் ... Read more..

பம்பலப்பிட்டியில் தமிழ் இளைஞர் கொலை : விசாரணை நடத்துமாறு அங்கிலிக்கன் ஆயர்

Saturday, October 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பம்பலப்பிட்டியில் கடலில் மூழ்கடித்துத் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு மாவட்ட அங்கிலிக்கன் ஆயர் பேரருட்திரு டுலிப் சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார். மனநோயாளியான ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் வேறு சிலரும் தாக்கியமை ... Read more..

தாய்நாட்டைக் கட்டியெழுப்ப சகல இலங்கையரும் நாடுதிரும்ப வேண்டும் நேபாளத்தில் ஜனாதிபதி அழைப்பு

Saturday, October 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சுதந்திரமடைந்துள்ள தாய்நாடு உங்களை வரவேற்கத் தயாராகவுள்ளது. தாய்நாட்டைக் கட்டியெழுப்ப வெளிநாடுகளிலுள்ள சகல இலங்கையர்களும் நாட்டுக்குத் திரும்ப வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாளத்திலிருந்து பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். நேபாளத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந் நாட்டில் வாழும் ... Read more..

ஜனாதிபதி நாளை திருப்பதி பயணம் : ஆந்திராவில் வரலாறு காணாத பாதுகாப்பு

Friday, October 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜனாதிபதி ராஜபக்ஷ திருப்பதி கோவிலுக்கு நாளை செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அவர் சிறப்பு விமானம் மூலம் கொழும்பிலிருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நாளை காலை 11.00 மணிக்கு வருகிறார். பின்னர் அவர் வாகனம் ஒன்றில் திருப்பதி மலைக்குச் ... Read more..

கிழக்கில் முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைக்கும் முயற்சியில் அமெரிக்க

Friday, October 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கிழக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகளை மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைக்கும் பொருட்டு, சொந்த மற்றும் சிறிய வணிக முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு தேவையான சாதனங்களையும் வளங்களையும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிலையம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணன் ... Read more..

நேபாளம் சென்ற ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் பெரு வரவேற்பு

Friday, October 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று நேபாளம் சென்றடைந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்களிக்கப்பட்டது. இலங்கை நேரப்படி நேற்று நண்பகல் 1.40 அளவில் நேபாள காத்மண்டு நகரிலுள்ள த்ரிபுவான் ... Read more..

கண்ணிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்த மேலும் 5 நவீன இயந்திரங்கள்

Friday, October 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மக்களை துரிதமாக மீளக் குடியமர்த்து வதற்கு ஏதுவாக மிதி வெடிகள், நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கை களை விரைவுபடுத்தும் நோக்குடன் மிதிவெடிகள் அகற்றும் மேலும் ஐந்து நவீனரக இயந்திரங்கள் இன்று இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்படுகின்றன. 250 மில்லியன் ரூபா பெறுமதியான மேற்படி ... Read more..

உடன்படிக்கை மூலம் ஐ.தே.கவினால் புலிகளுக்கு இறைமை தாரைவார்ப்பு: அமைச்சர் யாப்பா

Friday, October 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புலிகளுடனான போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் அவர்களின் மெய்நடப்பு  தமிழீழ அரசை ஏற்றுக் கொண்டு, நாட்டின் இறைமையைக் காட்டிக் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு, இராணுவ வெற்றியை விமர்சிக்க அருகதை உள்ளதா என அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. புலிகளின் தனி அரசுக்கு ... Read more..

ஜீ. எஸ். பி சலுகை கிடைக்காவிட்டாலும் விளைவுகளை முகம்கொடுக்க தயார் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால்

Friday, October 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜீ. எஸ். பி. + சலுகை கிடைக்காமல் போகும் பட்சத்தில் கூட அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். சரியான தயார்படுத்தல்கள், அணுகு ... Read more..

சிறுபான்மை கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து தீவிர கவனம்

Thursday, October 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சிறுபான்மை கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மை கட்சிகள் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதகாக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் தேர்தல்களின் போது பொதுவான ஓர் ... Read more..

நவம்பர் 15ம் திகதி தேர்தல் குறித்த இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும்: ஜனாதிபதி

Thursday, October 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை உறுப்பினர்களிடம் கருத்து அறியப்பட்டதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். Read more..

தேர்தல் பற்றி சிந்திக்காது நாட்டை சிந்தித்து தீர்மானங்கள் எடுப்பதே அரசின் கொள்கை: ஜனாதிபதி

Thursday, October 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தேர்தல் பற்றிச் சிந்திக்காது நாட்டைப் பற்றிச் சிந்தித்து தீர்மானங்களை மேற் கொள்வதே அன்றும் இன்றும் எதிர்காலத்திலும் அரசாங்கத்தின் கொள்கையாக விருக்கு மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்காக மேற் கொள்ளப்படும் தீர்மானங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதில் தாம் ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லையெனவும் ... Read more..

இந்திய இராணுவ குழுவும் பாதுகாப்பு செயலாளரும் இன்று சந்திப்பு

Wednesday, October 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை வந்துள்ள உயர் கட்டளை கற்கைநெறியை பயிலும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்த் சந்திப்பு இடம்பெற்றது. பிரிகேடியர் மொனி சன்டி தலைமையில் பதினான்கு அதிகாரிகள் ... Read more..

பாதுகாப்புப் பிரிவினருக்கு உளவுத் தகவல்களை வழங்கும் போர்வையில் மறைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் கைது

Wednesday, October 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதாக தெரிவித்து காவல்துறையினருடன் இணைந்து செயற்பட்ட நபர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய சகா என அடையாளம் காணப்பட்டுள்ளது. சிவனேசராஜா வினோத்குமார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more..