Archive for March, 2010

கண்ணிகள் அகற்றும் பணியில் வடக்கில் இராணுவம் தீவிரம்

Wednesday, March 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

1100 இராணுவ பொறியியலாளர், 7 அரச சார்பற்ற நிறுவனங்கள் முழுமையாக ஈடுபாடு வடக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளை இராணுவத்தினர் துரிதமாக மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். இடம்பெயர்ந்துள்ள மக்களை தமது சொந்த இடங்களில் வெகுவிரைவில் ... Read more..

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை மேலும் மோசடைந்துள்ளது : அனோமா

Wednesday, March 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்துவருவதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை காலை தனது கணவரை பார்க்கச் சென்று திரும்பிய பின்னர் ஜெனரல் சரத் பொன் சேகாவின் உடல்நிலை பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எனது ... Read more..

அடுத்த நாடாளுமன்றம் மிகவும் ஆபத்தானது: ரவூப் ஹக்கீம்

Wednesday, March 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அடுத்த நாடாளுமன்றம் மிகவும் ஆபத்தான நாடாளுமன்றமாக அமையப் போகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற, கண்டி மாவட்ட இளைஞர் பேரவையின் மகாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read more..

சென்னையில் நேற்றிரவு நில நடுக்கம் : மக்கள் பீதி

Wednesday, March 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சென்னையில் நேற்‌றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடியதா‌ல் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை‌யி‌ல் நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கொட்டிவாக்கம், ராயப் பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் நேற்றிரவு 10.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதை மக்கள் ... Read more..

தேர்தல் பாதுகாப்பில் பொலிஸ், முப்படை: 6ம் திகதி முதல் 78,000பேர் கடமையில்

Wednesday, March 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பொதுத் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழுவதும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், மற்றும் முப்படையைச் சேர்ந்த 78,200 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தலா 5 பேர் கொண்ட 7584 நடமாடும் பொலிஸ் பாதுகாப்புப்பிரிவும் இயங்கும் என பொலிஸ் ... Read more..

வடக்கு மக்களின் நீர்தட்டுப்பாட்டை நீக்க தெற்கிலிருந்து நதி திசை திருப்பும் திட்டம்: ஜனாதிபதி

Wednesday, March 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வட பகுதி மக்கள் முகம் கொடுத்துள்ள தண்ணீரிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் நதி திசை திருப்பும் திட்டம் முன்னெடுக்கப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முல்கிரிகலவில் தெரிவித்தார். அதேநேரம் அடுத்த வருடம் முதல் பாடசாலை பாடத் திட்டத்தில் ... Read more..

இடம்பெயர்ந்தோருக்கென 37 வாக்களிப்பு நிலையங்கள்

Tuesday, March 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடமாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்ட நலன்புரி மற்றும் மீள்குடியேற்ற கிராமங்கள் மற்றும் தனியார் வீடுகளில் தங்கியிருப்போர் வாக்களிக்கவென 37 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன என புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பெர்ணான்டோ தெரிவித்தார். Read more..

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழன்று யாழ். பயணம்

Tuesday, March 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெற உள்ள பொது தேர்தலின் நிமித்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வியாழக்கிழமையன்று யாழ்ப்பாணம் செல்ல உள்ளார். கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக தனது ... Read more..

நளினியின் விடுதலை கோரிக்கை நிராகரிப்பு

Monday, March 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

முன்னள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் விடுதலை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிக்க சிறை ஆலோசனைக் குழு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இந்தப் பரிந்துரையை ஏற்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக இந்திய ... Read more..

புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் நோக்கமில்லை, பல்வேறு வகையான திருத்தங்களை மேற்கொள்வோம்-அரசு

Monday, March 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

எமது அடுத்த அரசாங்கத்தில் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படமாட்டாது. ஆனால் தற் போதைய அரசியல் யாப்பில் பல்வேறு வகையிலான மாற்றங்களை கொண்டுவர எதிர்பார்க்கின்றோம். மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் இது தொடர்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது என்று சுற்றாடல் மற்றும் இயற்கைவள அமைச்சர் சம்பிக்க ... Read more..

மக்கள் நலனுக்காக எந்தவொரு அழுத்தத்தையும் எதிர்நோக்கத் தயார்: ஜனாதிபதி

Monday, March 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நாட்டுக்கு எதிரான சர்வதேச சக்திகளை நன்கறிந்துள்ள நான் இந்நாட்டு மக்களுக்காக எந்த அழுத்தத்திற்கும் முகம் கொடுப்பதற்கும் தயாராக உள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் பண்டாரகமவில் தெரிவித்தார். நாட்டு மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு எனது வாழ்நாளில் ... Read more..

சாவகச்சேரியில் கப்பம் கோரி கடத்தப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு

Sunday, March 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் காணாமல் போனா பாடசாலை மாணவன் நேற்றுப் பிற்பகல் சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை டச்சு வீதியை சேர்ந்த 17 வயதுடைய திருச்செல்வம் கபில்நாத் என்ற மாணவனே இரு வாரங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு ... Read more..

நாட்டை துரிதமாக அபிவிருத்தி செய்ய வலுவான பாராளுமன்றம் அவசியம்: ஜனாதிபதி

Sunday, March 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி எவ்விதத்திலும் சவாலாக அமையாததாலேயே முன்னணியின் அபேட்சகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலைமை ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலியில் தெரிவித்தார்.இருந்த போதிலும் விருப்பு வாக்குக்காக சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதை ... Read more..

மூன்று தமிழ் வேட்பாளர்கள் ஐ.ம.சு.மு.வில் இணைவு

Sunday, March 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

திகாமடுல்ல மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் மூன்று தமிழ் வேட் பாளர்கள் ஐ.ம.சு.மு வில் இணைந்துள்ளனர்.ரீ.எம்.வி.பி. வேட் பாளர்களான காத்தமுத்து கணேஸ், ஜெயரட்ணம் நேசராசா மற்றும் ஈரோஸ் வேட்பாளரான த. இராசலிங்கம் ஆகியோரே அரசுடன் இணைந்து கொண்டவர்களாவர். Read more..

யாழ்ப்பாணத்தில் வர்த்தகக் கண்காட்சி

Saturday, March 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் வர்த்தகக் கண் காட்சியில் பெருமளவிலான உள்ளூர் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். தென்னிலங்கை வர்த்தகர்களுக்கும் யாழ்குடாநாட்டு விற்பனையாளர்கள் மற்றும் சிறு கைத்தொழிலாளர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஊக்கு விக்கும் முயற்சியாக இந்தக் கண்காட்சி நடைபெற்றுவருகின்றது. Read more..