Archive for June, 2010

புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் உபய மெதவல

Tuesday, June 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் உபய வெதவல நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது. இராணுவப் பேச்சாளராக இருந்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, ... Read more..

ஜனாதிபதி இன்று உக்ரேய்னுக்கு விஜயம்

Tuesday, June 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உக்ரேய்ன் ஜனாதிபதி விக்டர் யனு கோவிச்சின் விசேட அழைப்பினையேற்று உக்ரேய்னுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அங்கு செல்லும் ஜனாதிபதி, அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரை சந்தித்து பேச்சு ... Read more..

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த நடவடிக்கை:முதல்வர் கருணாநிதி

Monday, June 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிவடைந்தையொட்டி கோவையில் இன்று செய்தியாளர்களை முதல்வர் கருணாநிதி சந்தித்தார். அப்போது மாநாடு சிறப்பாக நடத்த உதவியவர்களுக்கும், மாநாட்டில் ... Read more..

பெற்றோரை இழந்த 149 சிறுவர்கள் செட்டிக்குளம் முகாமில் தஞ்சம்

Monday, June 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வன்னியில் இடம்பெற்ற போரினால் பெற்றோரை இழந்த 149 சிறுவர் சிறுமியர் வவுனியா, செட்டிக்குளம் முகாமில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு வயதுகளை உடைய சிறுவர் சிறுமியர் இவ்வாறு நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. Read more..

ஐநா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

Monday, June 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இன்று ஜாதிக ஹெல உறுமயவினர் கொழும்பில் அமைந்துள்ள ஐநா அலுவலகம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஐநா நிபுணர் குழு இலங்கைக்கு வருவதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஜாதிக ஹெல உறுமய ... Read more..

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதிலை அளிக்க வேண்டும்

Monday, June 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதிலை அளிக்க வேண்டுமென தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது. பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு உதாசீனம் செய்யக் கூடாது என சமாதானப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த கோரிக்கைகளுக்கு சாதகமான முறையில் ... Read more..

முறையான அழைப்பு விடுத்தால் ஒற்றுமை குறித்து பேசத் தயார்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Monday, June 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் முறையான அழைப்பு விடுக்கப்படின் அது குறித்து பரிசீலிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கின்றது. எனினும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்றுக் கொள்கின்றாரா என்று ... Read more..

ஜெனரல் சரத்தை இராணுவ வாகனத்தில் அழைத்து வருமாறு நீதிமன்றம் உத்தரவு

Monday, June 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தனியான இராணுவ வாகனம் ஒன்றில் நீதிமன்றுக்கு அழைத்து வருமாறும் இன்று போல் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வர வேண்டாமென்றும் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே நீதிமன்றம் சரத்துக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட்ட பின்னரும் அவர் சிறைச்சாலை ... Read more..

ஜனாதிபதி, பிரதமர், இந்திய கடற்படை தளபதி இன்று சந்திப்பு

Monday, June 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் குமார் வர்மா நேற்று இலங்கை வந்தடைந்தார்.கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தை நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி தலைமையிலான உயர் மட்டக்குழுவினருக்கு விசேட ... Read more..

இலங்கைத் தமிழரின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்: முதலமைச்சர் கருணாநிதி

Sunday, June 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து துன்ப, துயரங்களுக்கு ஆளாக்கப்படுவதும், இவர்களின் மீள் குடியேற்றம் மற்றும் மீள்குடியேற்றப்பட்டு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்பையும், நல் வாழ்க்கையும் ஏற்படுத்த உறுதியளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் எமது ... Read more..

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக் கடிதத்திற்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கப் போவதில்லை: அரசாங்கம்

Sunday, June 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக் கடிதத்திற்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை நீட்டிப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு 15 அம்சங்கள் கொண்ட நிபந்தனைக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. Read more..

இலங்கை மனித உரிமை விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்: அமெரிக்கா

Sunday, June 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையின் எதிர்காலத்திற்கு மனித உரிமை விவகாரங்கள் மிகவும் அடிப் படையானதென அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஸ்திரமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more..

ஐநா நிபுணர் குழுவுக்கு பிரான்ஸ் ஆதரவு

Sunday, June 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழுவுக்கு பிரான்ஸ் வரவேற்பளித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. பிரான்ஸின் வெளியுறவு கொள்கைகள் தொடர்பிலான உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் ... Read more..

யுத்தத்தை நிறுத்துவதற்கு அரசாங்கமும், புலிகளும் இணங்கவில்லை : அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்

Sunday, June 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் பெரும் உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம் என நோர்வேயின் சுற்றாடல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறுத்தி சரணடையுமாறு புலிகளிடம் நோர்வே விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் ஐக்கிய நாடுகள் அமைப்பு, ... Read more..

இலங்கை சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் தொடர்பான தீர்மானம் விரைவில் : ஜூலியா கில்லார்ட்

Sunday, June 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை குறித்தத் தீர்மானம் அடுத்த மாதம் 8ஆம் திகதியளவில் முன்னெடுக்கப்படும் என அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் ... Read more..