Archive for April, 2011

இலங்கை உயரதிகாரிகள் கைது செய்யப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது : விஜயதாச ராஜபக்ஷ

Saturday, April 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையின் காரணமாக இலங்கையின் உயரதிகாரிகளை கைது செய்யக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கையின் முக்கிய பிரமுகளை கைது செய்வதற்கு தேவையான பிடிவிராந்தினைப் ... Read more..

ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நாளை எழுச்சிகரமான மேதினம்

Saturday, April 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் பல இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மே தின விழா நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பில் ... Read more..

ஒரு மில்லியன் மக்கள் குழுமிய இளவரசர் வில்லியம் : கதே திருமணம்

Saturday, April 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பிரித்தானிய அரச குடும்பத்தாரும், உலக பிரபலங்களும் புடைசூழ இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கதே மிடில்டனை நேற்றுக் கரம்பிடித்தார்.உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம் (28), கதே (29) திருமணம் நேற்று வெகு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.இந்தத் திருமணம் புகழ்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் ... Read more..

4092 முன்னாள் புலி உறுப்பினர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் விடுதலை

Saturday, April 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

எஞ்சியுள்ள 4092 முன்னாள் புலி உறுப்பினர்களும் இந்த வருட முடிவுக்குள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசானாயக்க  கூறினார்.இவர்களில் சுமார் 500 பேர் எதிர்வரும் வெசாக் பண்டிகையின் போது விடுவிக்கப்பட உள்ளதாகவும் ... Read more..

நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில்

Saturday, April 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. படப்பிடிப்பின் போது அவருக்கு வயிறு கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரை உடனடியாக மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.சிகிச்சை பெற்று ... Read more..

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் எண்ணமில்லை : பீரிஸ்

Friday, April 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையோ கிளர்ச்சிகளையோ நடத்தும் எண்ணம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை நேற்றைய தினம் சந்தித்த அமைச்சர் இவ்வாறு கூறியதாக ... Read more..

தேசிய, சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பேச்சுவார்த்தை

Friday, April 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. இலங்கை தொடர்பில் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்க ஐ.நா. செயலாளருக்கு உரிமை கிடையாது. இந்த அறிக்கை குறித்து தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான ... Read more..

ஜனாதிபதி, இராணுவத்தினர் மீது சேறுபூசுவதற்கு அனுமதியோம்

Thursday, April 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு எவ்விதமான அதிகாரமுமில்லை. அதேபோன்று அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு பான் கீ மூனுக்கு எந்தவிதமான உரிமையுமில்லை. இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதுடன் கடுமையாக எதிர்க்கின்றது. ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் ... Read more..

நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் : ரொஹான் குணரட்ன

Thursday, April 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமேன சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.அறிக்கை தொடர்பில் உணர்ச்சிவசப்படுவதனை விடவும் உரிய பதிலளிப்பது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more..

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் : பிரித்தானியா

Thursday, April 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்பட வேண்டுமாயின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சரியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது. Read more..

ஐ நா அறிக்கை - புலம்பெயர் தமிழர் மீது குற்றச்சாட்டு

Thursday, April 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் நிகழ்ந்த விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு ஆலோசனை கூற அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயல்பாடுகளும் கணிசமாக விமர்சிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு கணிசமான பொருளுதவியையும், தார்மீக ... Read more..

உலக மக்களின் கண்ணீருடன் பாபாவின் உடல் அடக்கம்

Wednesday, April 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புட்டபர்த்தி சாய் பாபா உடல் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.புட்டபர்த்தி சாய் பாபாவின் இறுதி சடங்கு நிகழ்வுகள் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியிருந்தன. இறுதிச் சடங்கில் உறவினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 650 ... Read more..

ரஷ்யா மற்றும் சீனா கொடுத்த அழுத்தமே பான் கீ மூனின் பின்வாங்கலுக்கு காரணம்

Wednesday, April 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய நாடுகள் சபையின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு தயாரித்துள்ள அறிக்கையை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம். இது தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தெளிவுபடுத்தல்களை மேற் கொள்ளவுள்ளோம். உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கருத்தரங்குகளை ... Read more..

உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீன சர்வதேச விசாரணை: பான் கீ மூன்

Wednesday, April 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

2009 மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு தன்னால் உத்தரவிட முடியும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ ... Read more..

ஐநா அறிக்கை குறித்து சங்கரி ஜனாதிபதிக்கு ஆலோசனைக் கடிதம்

Wednesday, April 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை தொடர்பில் ஐநா நிபுணர் குழு விடுத்துள்ள அறிக்கை குறித்து மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு மிக நீளமான கடிதமொன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் முழு வடிவம் கீழே காணப்படுகிறது. Read more..