Archive for May, 2011

பயங்கரவாத ஒழிப்பு - இலங்கையின் அனுபவம் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு

Tuesday, May 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

‘பயங்கரவாத ஒழிப்பு- இலங்கையின் அனுபவம்’ என்ற தொனிப்பொருளில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. கலதாரி ஹோட்டலில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.00 மணிக்கு ... Read more..

சீனா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன

Tuesday, May 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சீனா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை என குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் நியூயோர்க்கில் தற்போது நடைபெற்று வரும் மனித ... Read more..

மரணத்துக்குக் குழிதோண்டும் புகைபழக்கம்

Tuesday, May 31st, 2011 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

கலங்களால் உருவாக்கப்பட்ட உடலமைப்பிற்கு கடவுளால் ஆறறிவு ஊட்டப்பட்டு தோற்றம் பெற்றவர்களே மனிதர்களாகிய நாம். அந்த கலங்களுக்கு நெருப்பை ஊட்டும் நெஞ்சங்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று அனுஷ்டிக்கப்படும் தினமே இப்புகையிலை எதிர்ப்பு ... Read more..

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை: சமரசிங்க

Tuesday, May 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மனித உரிமை ஆணைக்குழு 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீள் நிறுவப்பட்டுள்ளது. அது தற்போது முழுமையாக இயங்கிவருகின்றது. அத்துடன் இந்த ஆணைக்குழுவானது இடம்பெயர்வு உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது என்று மனித ... Read more..

பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்த இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்து

Tuesday, May 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் ஐ.நா. நிபுணர் குழுவினால் முன்கொண்டு வரப்பட்ட ஆவணங்கள் குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கவனத்தில் எடுக்கவேண்டும் அத்துடன் இலங்கை பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என்று அமெரிக்க தூதுவர் ... Read more..

உதயன் பத்திரிகையின் செய்தியாளர் கவிதரன் மீதான தாக்குதலை சிறிரெலோ வன்மையாக கண்டிக்கிறது

Monday, May 30th, 2011 Posted in ஊடக அறிக்கை | No Comments »

உதயன் பத்திரிகையின் செய்தியாளர் கவிதரன் மீது நேற்றைய தினம் இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்தினை சிறிரெலோ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஊடக சுதந்திரமும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட்டுள்ளது என அரசாங்கம் உலகநாடுகளிற்கு கூறிவரும் இந்நிலையில் யாழ் மண்ணில் ஊடகவியலாளன் ... Read more..

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 17 ஆவது அமர்வு இன்று

Monday, May 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 17 ஆவது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜெனிவா சென்றுள்ள இலங்கைக் குழுவினர் சர்வதேசப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். இந்த மாநாடு இன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி வரையில் ... Read more..

நாட்டை இராணுவ மயமாக்கும் முயற்சியில் அரசாங்கம் : அத்தநாயக்க

Monday, May 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் அனைத்தும் நாட்டை இராணுவ மயமாக்கும் நடவடிக்கைகளாகவே அமைந்துள்ளன. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதுடன் பாடசாலை அதிபர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் பெரும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் ... Read more..

ஃபிஃபா தலைமைக்கான போட்டியிலிருந்து விலகல்

Monday, May 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

உலக கால்பந்தாட்ட சம்மேளனம் ஃபிஃபாவின் தலைவர் செப் பிளேட்டரை எதிர்த்து அடுத்த புதன்கிழமை நடக்கவுள்ள தேர்தலில் போட்டிக்கு நின்ற ஒரு ஒரு நபரான கத்தார் நாட்டைச் சேர்ந்த மொஹமது பின் ஹமாம் போட்டியிலிருந்து விலகியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக இவர் ஆட்களுக்கு கையூட்டு ... Read more..

அம்னெஸ்டிக்கு வயது 50

Monday, May 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் எனப்படும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை இன்று சனிக்கிழமை தனது ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளது. பீட்டர் பெனென்சன் என்ற பிரிட்டிஷ் வழக்குரைஞரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், சித்ரவதை மற்றும் மரண ... Read more..

நிபுணர் குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கை செயலாளர் நாயகம் பான் கீ மூன் வசம்

Sunday, May 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை சம்பந்தமான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனே தீர்மானிக்க வேண்டுமென ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். மேற்குறித்த அறிக்கை பற்றி "இன்னர் ... Read more..

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : வைகோ

Sunday, May 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா நேற்று மாலை சென்னை சைதைப்பேட்டையில் ... Read more..

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் சக்தி குறைந்து விட்டது : விமல்

Sunday, May 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆற்றல் எதுவும் இல்லையென்றும் அவர்களை எளிதாக அடக்கிவிட முடியும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே அமைச்சர் விமல் வீரவன்ஸ புலம்பெயர் விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் ... Read more..

தமிழீழம் அமைய ஐநா வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : கொளத்தூர் மணி

Saturday, May 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டிப்பதும், அதற்கு காரணமானவர்களை தண்டிப்பதும் மட்டுமே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வாக அமைந்து விடாது, இலங்கையை இனப்படுகொலை நாடு என்று அறிவிக்க வேண்டும். தனி தமிழீழத்தை நிறுவுவதற்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா மன்றம் உடனடியாக நடத்த வேண்டும் ... Read more..

நெடியவன் நிபந்தனைப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

Saturday, May 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே தலைவராகக் கருதப்படும் நெடியவன் நிபந்தனைப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதான நெடிவயனின் இயற் பெயர் பேரின்பநாயகம் சிவபரன் என்பதாகும். நோர்வே காவல்துறையினர் கடந்த வாரம் நெடியவனைக் கைது செய்து ஒஸ்லோ நீதிமன்றில் ஆஜர் ... Read more..