Archive for July, 2011

செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவத்தினை சிறிரெலோ வன்மையாகக்கண்டிக்கிறது

Sunday, July 31st, 2011 Posted in ஊடக அறிக்கை | No Comments »

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர்  ஞா.குகநாதன் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்தினை சிறிரெலோ கட்சி வன்மையாகக்கண்டிக்கிறது. வடக்கில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானம் கொண்டுவரப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என அரசாங்கம்  உலகநாடுகளிற்கு கூறிவரும் நிலையில் இவ்வாறான மிலேச்சத்தனாமான தாக்குதல் ஊடகவியலாளன் ... Read more..

புலம்பெயர் மக்களை வாக்காளராக பதிய தேர்தல் ஆணையாளர் இணக்கம் : யோகராஜன்

Sunday, July 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புலம் பெயர் மக்களை வாக்காளராகப் பதிவதற்கு தேர்தல் ஆணையாளர் இணக்கம்தெரிவித்திருப்பதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்பட் டுள்ளது தொடர்பில்தான் தேர்தல் ஆணையாளரை நேரில் சந்தித்த போதே அவர் இவ்வாறு இணக்கம் ... Read more..

இலங்கை முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டும் : பிரிவிக்

Sunday, July 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை வாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டுமென அண்மையில் நோர்வேயில் தாக்குதல்களை நடத்திய என்ட்ராஸ் பிரிங் பிரிவிக் தெரிவித்துள்ளார். இலங்கை, ஐரோப்பா, பிலிப்பைன்ஸ் மற்றும்  சீனா ஆகிய நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நோர்வே பிரதமர் அலுவலகம் மற்றும் இளைஞர் ... Read more..

இலங்கையில் காணாமல் போனோர் 5,653 பேரின் விசாரணையை துரிதப்படுத்துக : ஐக்கிய நாடுகள் சபை!

Sunday, July 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

காணாமல் போய் 17 மாதங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட மனித உரிமை நடவடிக்கையாளரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. பட்டாணி ராசிக் என்ற புத்தளத்தை தளமாகக் கொண்ட இந்த மனித உரிமை நடவடிக்கையாளர், ... Read more..

நிரூபமா ராவிற்கு இலங்கை பிரியாவிடை

Saturday, July 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மூன்றுநாள் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் நேற்றிரவு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் தனது வெளிவிவகார செயலர் பதவியிலிருந்து நாளையுடன் விடைபெறுகிறார். பிரியாவிடை அளிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் ... Read more..

நுகேகொடயில் திடீர் சோதனை: 206 பேர் கைது!

Saturday, July 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

24 மணித்தியாலங்களாக நுகேகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 209 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணிதொடக்கம் இன்று காலை 6 மணிவரையான 24 மணித்தியாலங்கள் நுகேகொடை பொலிஸ் வலயத்திற்குட்பட்ட அனைத்து பொலிஸ் ... Read more..

மு.க.ஸ்டாலின் கைது தமிழகம் முழுக்க பதட்டம்

Saturday, July 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

 திருவாரூர் மாவட்ட செயலர் கலைவாணன் என்பவரை போலீசார் கைது செய்ய முயற்சித்போது போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த மு.க., ஸ்டாலினையும் போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது போலீசார் ஸ்டாலினுடன் இருந்த கலைவாணனை கைது செய்ய வந்திருப்பதாக கூறினர். Read more..

யுத்த வலயத்தில் மனித உரிமை மீறல் நியாயப்படுத்த முடியாது : நிரூபமா ராவ்

Saturday, July 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டுமென இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார். இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more..

சனல்4 வெளியிட்ட விபரங்கள் நிபுணர் குழு அறிக்கையில் உள்ளடக்கம் : ஐ.நா

Saturday, July 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்வது இலங்கை அரசாங்கத்தின் கடமை எனவும் அதனை கண்காணிப்பது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலுள்ள சனல் 4 தொலைக்காட்சி புதன்கிழமை இரவு ... Read more..

கட்சியின் ஒருமைப்பாட்டினை பாதுகாக்க கரு ஜயசூரியவுக்கு விசேட பொறுப்பு : ரணில்

Saturday, July 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளவர்கள் கட்சிக்குள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பலவாறான கருத்துக்களைக் கொண்டுள்ள போதும் கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் அதனை கட்டியெழுப்பவும் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுக்கு தான் விசேட பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். லண்டனில் ... Read more..

தென்சூடான் நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரிக்கக் கூடாது : ரணில்

Saturday, July 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தாபித்த ரோம் சமவாயத்தில் கையெழுத்திடாத இலங்கை போர்க் குற்றம் தொடர்பான வழக்குக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சானல் 4 தொலைக்காட்சி செய்தியில் போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை ... Read more..

மூன்று தரப்புக்களும் ஒன்றாக இருந்தால்தான் பிரச்சினைக்கு தீர்வு : ரவூப் ஹக்கீம்

Saturday, July 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த மூன்று தரப்புக்களும் ஒரே மேசையில் ஒன்றாக இருந்து தான் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார். கல்முனை ... Read more..

யாழ். மாவட்ட எம்பிக்கள் தொகை குறைக்கப்படுவது இடை நிறுத்தப்படவேண்டும் : மனோ

Friday, July 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ். மாவட்டத்தின் எம்பிக்கள் தொகை ஒன்பதிலிருந்து 5 ஆக குறைக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இருந்தாலும் கூட, இதன் பின்னணி அரசியல் அடிப்படை கொண்டதாகும். எனவே அரசியல் ரீதியான தீர்வு காணப்படும் வரை இந்நடவடிக்கை இடை ... Read more..

செனல்4 ஊடகத்திற்கு எதிராக பிரித்தானியா நடவடிக்கை எடுக்க வேண்டும் : கோதபாய

Friday, July 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

செனல்4 ஊடகத்திற்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். செனல்4 ஊடகம் பொறுப்பற்ற வகையில் இலங்கை தொடர்பான ஆவணப்படங்களை ஒளிபரப்புச் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சரணடைந்தவர்களை கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் ... Read more..

ஐ.தே.க. வின் தலைமை பதவியை ஏற்பதற்கு கரு ஜயசூரியா இணக்கம்

Friday, July 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை பிரதித் தலைவரும், எம்.பி.யுமான கருஜயசூரிய பொறுப்பேற்க வேண்டு மென்ற கோரிக்கை முன்வைக்கபட்டதாகவும், அதனை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் அக்கட்சியின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். கட்சியின் மறுசீரமைப்புக்கு ஒத்துழைத்தவர்கள் பழிவாங்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டதும், ... Read more..