ஆப்கானிஸ்தானில் பாராளுமன்றம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு: 21 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் பாராளுமன்றம் அருகே இன்று தேசிய பாதுகாப்பு அமைப்பின் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினிபஸ் மீது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் மற்றொரு தற்கொலைப்படை தீவிரவாதி வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்கச் செய்தான்.அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இரட்டைத் தாக்குதலுக்கு பாராளுமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 21 பேர் பலியானதாகவும், 45 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக தலிபான்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply