தேர்தல்கள் தொடர்பிலான சிரேஷ்ட DIG யாக விக்ரமரத்ன நியமனம்

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சி.டீ.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மூலம் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.நிர்வாக பிரிவு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சி.டீ.விக்ரமரத்ன கடமையாற்றுவதுடன் மேலதிகமாக அவருக்கு தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய காமினி நவரத்ன கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply